முதல் சலனப்படம் திரையிடப்பட்ட நாள்

லூமியேர சகோதரர்கள்லூமியேர சகோதரர்களான ஆகஸ்டே மேரி லூமியர (Auguste Marie Louis Nicolas Lumière) மற்றும் லூயிஸ் ஜீன் லூமியேர  (Louis Jean Lumièr) ஆகிய இருவரும் முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். டிசம்பர் 28, 1895 அன்று பாரிஸ் நகரில் தங்களது பத்து குறும்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இவர்களது முதல் சலனப்படமான Sortie des Usines Lumière à Lyon (Workers Leaving the Lumière Factory)ம் இதில் அடங்கும். ஒவ்வொரு படமும் 17 மீட்டர் நீளம் கொண்டது. 46 நெடிகள் ஓடக்கூடியது. இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.

நதிக்கரை பற்றி…

உலகமெங்கும் மனித சமூகத்தின் வாழ்வாதாரமாய் நாகரிகத்தின் தொட்டிலாய் நைல் (நைல் நதி நாகரிகம்), சிந்து (சிந்து சமவெளி நாகரிகம்), கங்கை, பிரம்மபுத்திரா, தேம்ஸ் போன்ற நதிகளைக் குறிப்பிடுவார்கள். அங்ஙனமே காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நம் ஊர் நதிகளும் நமக்கு வழங்கியது அத்தகைய நல்வாழ்வுதான். மனித சமூகத்திற்கு அன்னையாய் தந்தையாய் இருந்த நதியும் கரையும் நமக்கு இன்று அந்நியப்பட்டுப் போய் கொண்டிருக்கின்றன. நதிநீர் பங்கீட்டுச் சண்டைகளும், கழிவு நீர் கலப்பு, சுற்றுச் சூழல் மாசு என்று எத்தனையெத்தனை வழிகளில் ஒரு நதிக்கு தீங்கிழைக்க முடியுமோ, அதனுடைய போக்கை கட்டுப்படுத்தமுடியுமோ அத்தனை விதமாகவும் மனித சமூகம் முயன்றுகொண்டிருக்கிறது. நதிகள் நமக்கு தந்த நல்வாழ்வை இப்போது அவற்றிற்கு தரவேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது. ஆம் அவற்றோடுதான் நம் வாழ்வும் பிணைந்தேயிருக்கிறது.
மீண்டும் நாம் நதிக்கரைகளைத் திரும்பிப் பார்க்கவும், அன்போடு நினைவு கூறவும், அவற்றைக் காக்கவும் புறப்படுவோம். புது வெள்ளமாய்…

நதிக்கரை இரண்டு பிரிவாக பதிவேற்றப்படுகிறது. ஒன்று சமூகம், அரசியல், அறிவியல் தகவல் கட்டுரைகளுடன் nadhikarai.blogspot.com என்ற தளத்திலும் இரண்டு கலை, இலக்கியம், வரலாறு சார்ந்த பதிவுகளுடன் nadhikarai.wordpress.com என்ற தளத்திலும் பதிவேற்றப்படுகிறது. படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி!

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!